.

Monday, September 3, 2007

இடைத்தேர்தலில் பி.சி.கந்தூரி வெற்றி: உத்தரகண்டில் பா.ஜ.க.வுக்கு 'மெஜாரிட்டி'

உத்தரகண்ட் மாநிலம் துமாகோட் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் பி.சி.கந்தூரி வெற்றி பெற்றார். இவரது வெற்றியையடுத்து ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை (70-க்கு 36) கிடைத்துள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்கள் உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 32 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேரின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.சி.கந்தூரி, உத்தரகண்ட் மாநில முதல்வராக தேர்வானார். இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

துமாகோட் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் பிரமுகர் ரவாத் பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகி கந்தூரி போட்டியிட வாய்ப்பளித்தார். இதற்கு கைங்கர்யமாக தான், எம்.பி. பதவி விலகிய தொகுதியில் ரவாத்தை நிறுத்த முடிவு செய்தார் கந்தூரி.

தினமணி

Zee News - Khanduri wins Dhumakot by-poll, BJP secures majority
IndianExpress.com :: Khanduri silences critics with big win in Dhumakot

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...