.

Wednesday, May 9, 2007

ச: தினகரன்-சன் டிவி அலுவலகங்கள் தாக்கப்பட்டு 2 பேர் பலி. அடக்கி வாசிக்கும் தினமலர்.

மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல்-2 பேர் பலி. 7 பஸ்களுக்கு தீ வைப்பு

தினகரன் நடத்தும் கருத்துக் கணிப்பு காரணமாக பாமகவின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னொரு புறம் ஸ்டாலினுக்கே அதிக செல்வாக்கு என்று கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதால் ஆத்திரம் கொண்டு அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப் பட்டனர். மநுரையில் தினகரன் பத்திரிகை, சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாயின.

விரிவான செய்தி இங்கே (தட்ஸ்தமிழ்)

வழக்கமாக திமுக தரப்பு பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தினமலர் இம்முறை அடக்கி வாசிக்கிறது.

தினமலர் இணைய தளத்தில் இப்போதைய செய்தி:

மதுரை தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் ; இருவர் பலி

உத்தங்குடி: மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் இருவர் இறந்தனர். இதில் ஒருவர் கோபி என்ற ஊழியர் ஆவார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 comments:

We The People said...

தினமலருக்கும் மதுரையில் ஆப்பீஸ் இருக்குள்ள தல அதனால தான்! அடுத்த ஆப்பு அவர்களுக்கு வந்துவிடும் என்ற நல்ல எண்ணமே காரணம் :))))))))

எல்லாம் நம்ம தலை எழுத்து!

Anonymous said...

சிந்தாநதி அய்யா,

தினமலரில் காட்டுவதற்கு பதிலாக தான் ஜெயாடிவியில் காட்டுகிறார்களாமே? அதை பாக்க வேண்டியது தானே?

Anonymous said...

இறுதியில் இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள்தான் காரணம் என முகர்ஜி சொல்வரா என்ற அச்சத்தில் இருக்கின்றோம்.

Anonymous said...

இறுதியில் இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள்தான் காரணம் என முகர்ஜி சொல்வரா என்ற அச்சத்தில் இருக்கின்றோம்.

Anonymous said...

/******************
We The People said...
தினமலருக்கும் மதுரையில் ஆப்பீஸ் இருக்குள்ள தல அதனால தான்! அடுத்த ஆப்பு அவர்களுக்கு வந்துவிடும் என்ற நல்ல எண்ணமே காரணம் :))))))))

எல்லாம் நம்ம தலை எழுத்து!
**************************/


So we are living in a Rowdi Rajiyam..எல்லாம் நம்ம தலை எழுத்து!

இறுதியில் இதற்கெல்லாம் ADMK or ஈழத் தமிழர்கள்தான் காரணம் என முகர்ஜி சொல்வரா என்ற அச்சம்

உண்மைத்தமிழன் said...

சிந்தா நதி ஸார்.. 4.15 மணிக்கு இங்கு இடப்பட்டிருக்கும் கமெண்ட்ஸ் ஒரிஜினல் உண்மைத்தமிழன் இட்டதல்ல.. நான் இப்போதுதான் இதைப் பார்த்தேன். இன்று காலையிலிருந்தே இஇந்தப் போலியால் எனக்குப் பெருந்தொல்லை.. குமரன், டோண்டு ஸார் என்று இருவரின் பதிவிலும் போலியாக பின்னூட்டம் இட்டிருக்கிறார் போலியார்.. எங்கே சென்று யாரிடம் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

தயவு செய்து இதைப் பதிவு செய்து அந்த 4.15 மணிப் பதிவை நீக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..

உண்மை said...

இவிங்கள திருத்தவே முடியாது !

மனிதன் said...

தி.மு.க ஆட்சி என்றாலே குண்டர்கள் ரவுடிகள் தீவிரவாதிகள் அனைவருக்கும் நட்பான ஆட்சி என்று நினைக்கும் அளவுக்குதான் சம்பவங்கள் நடக்கின்றன்.

சட்டம் ஒழுங்கு என்றால் அம்மாதான்.

அம்மாவின் ஆட்சி மலரும் நேரம் வந்துவிட்டதா?.
அன்புடன்,
ராமச் சந்திரன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...