.

Wednesday, May 9, 2007

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்

பெரம்பலூர், ஓசூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை தரமணியில் ரூ. 850 கோடி மதிப்பில் இரண்டாவது தகவல் தொழிநுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கி, 2009-ம் ஆண்டு துவக்கத்தில் நிறைவுபெறும் என்றார்.

சென்னை சோழிங்கநல்லூரில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்கள் இடையே உள்ள மின்னணுவியல் இடைவெளியை சரிசெய்ய பொது சேவை மையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்தங்கிய பகுதிகள் மேம்பாடு அடையும் வகையில் பெரம்பலூர், ஓசூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியையும், விரைவான முன்னேற்றத்தையும் காண முடியும் என்றார்.

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்: கருணாநிதி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...