.

Monday, July 2, 2007

ஆஃப்கான்: விமான தாக்குதலில் 107 பேர் பலி


45 பேர் அப்பாவிகள்


ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாநிலத்தில் கெரெஷ்க் மாவட்டத்தில் ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்றபோது அவற்றின் மீது தலீபான் தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இதில் பல ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை மூண்டது. ராணுவத்தை சமாளிக்க முடியாததால் தீவிரவாதிகள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் ஒரு கிராமத்துக்குள் புகுந்தனர்.

கிராமவாசிகளின் வீடுகளில் தீவிரவாதிகள் நுழைந்துகொண்டனர். அவர்களை விரட்டி சென்ற ராணுவம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்ததும் தலைமை முகாமுக்கு தகவல் கொடுத்தது. இதைதொடர்ந்து ராணுவம், தீவிரவாதிகள் அடைக்கலம் புகுந்த வீடுகளை குறிபார்த்து விமானத்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் மொத்தம் 107 பேர் பலியானார்கள். அவர்களில் 45 பேர் அப்பாவிகள் ஆவார்கள்.

இந்த தகவலை 2 ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். அப்பாவிகள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் சொல்வதுபோல அவ்வளவு அதிகம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...