.

Monday, July 2, 2007

தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி

அரசின் அங்கீகாரம் பெற்று நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் அரசு நிலங்களில் பள்ளிகளைக் கட்டி நடத்தும் தனியார் பள்ளிகள் 10 சதவிகித இடங்களை ஏழை மாணவர்களுக்கும் ஐந்து சதவிகித இடங்களை அப்பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் ஒதுக்க வேண்டும் என்றும் இக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கவேண்டும் என்றும் தில்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அஷோக் அகர்வால் என்னும் தில்லி வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை 2008-2009 ஆண்டிலிருந்து அமலுக்கு வரும். இதனைக் கடைப்பிடிக்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அரசு நிலத்தின் மீதுள்ள ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது.

- ஸஞ்ஜயன் / வடக்குவாசல்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...