.

Monday, July 2, 2007

இந்தியா-குவைத்: விமானப் போக்குவரத்து மீட்பு.

குவைத் நாட்டுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் காலாவதி ஆனதால் ஜுலை 1-ந் தேதி முதல் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று குவைத் அரசு எச்சரித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக இந்திய அதிகாரிகள் குவைத்தில் முகாமிட்டு அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே உடன்பாடு கையெழுத்து ஆனது.

அதன்படி குவைத்தைச் சேர்ந்த குவைத் ஏர்வேஸ், அல்-ஜசீரா விமானங்கள் தினமும் ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா நகரங்களுக்கு வந்து செல்லும். அதே போல இந்தியாவின் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் தினமும் இயக்கப்படுகிறன.

இந்த உடன்பாட்டில் விமான இருக்கை வசதியை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன் மூலம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்படுமோ என்ற பயத்தில் இருந்த பல ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...