.

Monday, July 2, 2007

பாக்கிஸ்தான்: 50 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.

இந்தியா-பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையில் கண்ட உடன்பாட்டின் படி இந்தியாவில் உள்ள 43 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுதலை செய்தது.

இதை அடுத்து பாக்கிஸ்தான் ஜெயிலில் இருந்து 50 இந்திய மீனவர்களை பாக்கிஸ்தான் அரசு விடுதலை செய்தது. லாண்டி ஜெயிலில் இருந்து விடுதலையான அந்த இந்திய மீனவர்கள் பஸ்மூலம் லாகூர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இன்று வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவர்கள் பாக்கிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். இன்னும் 400 இந்திய மீனவர்கள் பாக்கிஸ்தானின் பல்வேறு ஜெயில்களில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...