.

Monday, July 2, 2007

மாயக்கண்ணாடி படம் பரிசு போட்டியில் மோசடியா? - சேரன்

மாயக்கண்ணாடி படத் துக்கு விமர்சன போட்டி அறி விக்கப்பட்டது. வெற்றி பெறு வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தன்னுடன் உதவி டைரக்டராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என சேரன் கூறினார்.

இந்த போட்டிக்கான பரிசு கள் இதுவரை வழங்கப் படவில்லை என்றும் பரிசு போட்டி மோசடி என்றும் கருப்பசாமி கரையாளர் என் பவர் புகார் கூறினார்.

இதற்கு டைரக்டர் சேரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் சார்பில் சேரன் பட கம்பெனியான டீரிம்ஸ் தியேட்டர்ஸ் மானேஜர் எழில் பாரதி வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

மாயக்கண்ணாடி விமர்சன போட்டி தொடர்பாக டைரக்டர் சேரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாயக் கண்ணாடி படம் பார்த்து விட்டு ஆயிரக்கணக்கானோர் கடிதம் எழுதியுள்ளனர். எங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்கின்றன. தகுதியும், திறமையும் கொண்ட விமர்சனங்களை எழுதியவர் களுக்கு அறிவித்தபடி அங்கீகாரம் அளிக்கப்படும்.

அறிவிப்பு விளம்பரத்தில் விமர்சனங்களை அனுப்ப கடைசி தேதியோ பரிசு வழங்கு வதற்கான தேதியோ தெரி விக்கப்படாததால் தொடர்ந்து கடிதங்கள் வந்து குவிகின்றன. சேரன் தயாரித்து இயக்கும் அடுத்த படத்துக்கான அறி விப்பு ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கிறது. உதவி இயக்குனர்களுக்கான தேவையும் அப்போது தான் தேவைப்படும். அந்த படத்தின் அறி விப்போடு விமர்சன போட்டி தொடர்பு தொடர்பான அறி விப்பும் சேர்ந்து வெளியிடப்படும்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் சேரனுக்கு இல்லை. மாயக்கண்ணாடி உள்ளிட்ட அவரது எட்டு படங் களுமே இதற்கு சாட்சி. அறி வித்தபடி பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயை மிச்சம் பிடித்து மோசடி செய்து ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் சேரனுக்கு இல்லை. யாருக்கு எதிராக குற்றம் சுமத்துகிறோம் குற்றத்தில் உண்மை இருக்கிறதா என் பதை உணர்ந்து சொல்ல வேண்டும்.

பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொள்ளா மல் சமூக அக்கறை யோடு படம் எடுக்கும் படைப் பாளியை பாராட்டா விட்டாலும் காயப்படுத்தாமல் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...