.

Monday, July 2, 2007

இந்தியா: விரைவில் நீதிமன்றங்கள் கணினிமயம்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வெகு விரைவில் கணினி வலைப்பின்னல் மூலம் இணைக்கப்படுகின்றன.

அனைத்து நீதிமன்றங்களுக்கும் வயர்லெஸ் கருவிகள், கை பேசிகள், கணிப்பொறிவசதி செய்து தரப் பட உள்ளன.

இதற்காக ரூ.455 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் நீதிபதிகளுக்கு `மடிக்கணினி'கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான விழா வருகிற 9-ந்தேதி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடக்கிறது.

ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்குகிறார்.

அனைத்து நீதிபதிகளுக்கும் இது தொடர்பாக 3 மாத பயிற்சி தரப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.சி.பாருகா தெரிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...