.

Monday, July 2, 2007

சண்டிகர் தீ விபத்தில் BSNL தொலைபேசிகள், செல்பேசிகள் இயக்கம் தடைபட்டுள்ளது

சண்டிகர் நகரின் செக்டர் 17இல் உள்ள பிஎஸ் என் எல் தொடர்பகத்தில் நேற்று நடந்த தீவிபத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் பழுதடைந்ததால்
80,000 செல்பேசி இணைப்புக்களும் ஆயிரக்கணக்கான தொலைபேசி இனைப்புக்களும் இயங்காமல் இயல்பூ வாழ்வை பாதித்திருக்கிறது. வங்கி அலுவல்கள், தங்கள் வழங்கிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப் பட்டுள்ளன. தானியங்கி பணவழங்கி (ATM) களும் தங்கள் தொடர்பை இழந்து பணம் வழங்கமுடியாது இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தினை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தியபோதும் உபகரணங்களை காப்பாற்ற இயலவில்லை. மாற்று உப்கரணங்கலை நிறுவி இயல்புநிலை திரும்ப 2-3 நாட்கள் ஆகும் என பி எஸ் என் எல் இன் உயரதிகாரிகள் கூறினர்.
India eNews - Telephone exchange fire cripples Chandigarh

1 comment:

Anonymous said...

As we start to depend more and more on IT, it is essential that we have disaster management schemes are also in place. Otherwise, the economy may cripple with few incidents like these, whether accidental or man made. (Jus seen Diehard 4.0 :))

-o❢o-

b r e a k i n g   n e w s...