.

Wednesday, July 4, 2007

கேரளா: முதலமைச்சரை கைது செய்ய நீதிமன்ற ஆணை.

கேரளாவில் கடந்த 2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தற்போதைய முதல்-மந்திரி அச்சுதானந்தன், விளையாட்டுத்துறை மந்திரி விஜயகுமார், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் மேயர் ஜெயன்பாபு உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 11 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு கோர்ட்டு பலமுறை நோட்டீசு அனுப்பியது. ஆனால் அச்சுதானந்தன் உள்பட யாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

இந்தநிலையில் நேற்று நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன், பலமுறை நோட்டீசு அனுப்பியும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருக்கும் அச்சுதானந்தன், விஜயகுமார், பினராய் விஜயன், ஜெயன்பாபு உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதற்காக ஜாமீன் இல்லாத கைது வாரண்டு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

முதல்-மந்திரி மற்றும் மந்திரி, மேயர் ஆகியோருக்கு கைது வாரண்டு பிறக்கப்பட்டுள்ளதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாலைமலர்

1 comment:

Anonymous said...

அச்சுதானந்தன் இடத்தில் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இருந்திருந்தால்.....

எத்தனை பஸ்கள் எரிந்திருக்கும்?
எத்தனை உயிர்கள் பறந்திருக்கும்?

-o❢o-

b r e a k i n g   n e w s...