.

Wednesday, July 25, 2007

அண்ணா பல்கலை.யில் அப்துல்கலாமுக்கு சம்பளமில்லை.

குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து விடைபெற்ற அப்துல்கலாம், இன்று இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியதைப் போலவே, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், 'உயிரி தொழிற்நுட்பம்' பாடப்பிரிவின் கவுரவப் பேராசிரியராகவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் பணியாற்ற உள்ளார். இதற்காக சம்பளம் எதுவும் வழங்கப்படாது என்று துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் அவருக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க உள்ளது.

"அப்துல்கலாம் அவர்களின் அறிவும் அனுபவமும் மாணவர்களுக்கு நன்கு பலன் அளிக்கும்" என்ற துணைவேந்தர் இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் தெரிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...