.

Tuesday, July 17, 2007

நார்வே: தங்கி, தூங்கி விழித்து 'ஷாப்பிங்' செய்யலாம்

பொதுவாக எல்லாரும் பொருட்களை வாங்கத்தான் கடைக்குச் செல்வர். ஆனால், நார்வேயில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் வாடிக்கையாளர் தூங்கவும் செய்யலாம்.

ஆம், நார்வேயில் உள்ள பிரபல சர்வதேச ஷாப்பிங் சென்டரான "ஐகியா'வில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடையிலேயே தூங்குவதற்கு சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன; அதுவும் இலவசமாக. தங்களுக்கு எப்படிப்பட்ட அறைகள் வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தேர்வும் செய்யலாம். குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ற வகையிலும் அறைகள் தரப்படும். அவர்களுக்கு உணவும் வழங்கப்படும்.

ஐகியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ப்ரோடு உல்பஸ்ட் கூறுகையில், ""கோடை விடுமுறையில் மட்டும் எங்கள் கடைக்கு ஒன்பது லட்சம் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். நார்வே நாட்டில் அனைவரையும் கவர்ந்துள்ள "ஹோம்கோல்லன் ஸ்கை ஜம்ப்'புக்கு ஒரு ஆண்டில் வருபவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்,'' என்று கூறினார். நார்வேயில் ஏராளமானோர் "ஐகியா' கடையில் தூங்க தயாராகி வரும் நிலையில், மற்ற கடைகள் இதனை பொறாமையுடன் பார்த்து வருகின்றன.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...