.

Tuesday, July 17, 2007

கேரளா: நாளை முழுஅடைப்பு

கேரளாவில் (வைரஸ்) நுண்கிருமிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(புதன்) 12 மணிநேர கடையடைப்பு நடத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக நுண்கிருமிக் காய்ச்சலால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 450 பேர் உயிரிழந்தனர். எனினும், மாநில அரசு, காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்களை நியமிக்கவில்லை. மருந்துகளையும் இருப்பு வைக்கவில்லை. அதனால், மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, பத்தனம்திட்டா மாவட்டம் தவிர, மாநிலம் முழுதும் 12 மணிநேர கடையடைப்பு நடத்தப்படும். மருந்து கடைகள் மற்றும் சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நிறுவனர் தங்கச்சன் தெரிவித்தார் என்று தினமலர் தெரிவிக்கிறது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...