.

Tuesday, July 17, 2007

ஜப்பான்: மீண்டும் பூகம்பம்;அணுக்கதிர்வீச்சு பீதி

ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் தாக்கியதால் சேதம் அடைந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலந்ததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் நிகாட்டா பகுதியில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 6.6 ரிக்டரில் பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. பூகம்பத்தால் காஷிவாசாகி என்ற இடத்தில் ஒரு ரெயில் கவிழ்ந்தது.

இந்த பூகம்பத்தால் தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் ஜப்பானின் மேற்கு பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதை யொட்டி கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த பூகம்பம் 6.6 ரிக்டரிலும் பதிவானது.

இதிலும் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 1000-க் கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

முதல்முதலாக ஏற்பட்ட பூகம்பத்தால் காஷிவாசாகியில் உள்ள அணுசக்தி நிலையம் சேதம் அடைந்து தீ பிடித்துக் கொண்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டாலும் அந்த உலையில் இருந்து 1200 லிட்டர் தண்ணீர் கசிந்தது. உலகிலேயே மிகப்பெரிய அணுஉலை இது தான்.

கதிர்வீச்சு தன்மை உள்ள இந்த தண்ணீர் கடலில் திருப்பிவிடப்பட்டது. அணுகதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலக்கிவிடப்பட்டது. பல மணிநேரம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை.

கடலில் இந்த நீர் கலந்தது பற்றி தகவல் தெரிந்ததும் அந்த பகுதி முழுவதும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆபத்து ஏதும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...