.

Thursday, July 12, 2007

'துணைகுடியரசுத்தலைவர் பதவி வேண்டாம்' - சரத்பவார்

மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப் பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று கூறினார். இனி மேல் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்ட போது, "கடந்த 41 ஆண்டுகளாக மகாராஷ்டிர சட்டசபையிலோ அல்லது பார்லிமென்ட்டிலோ நான் உறுப்பினராக இருந்து வருகிறேன். எனவே, அந்த இடத்திற்கு வேறொருவர் வர வேண்டும் என்று விரும்புகிறேன்,'' என்று அவர் பதிலளித்தார்.

நன்றி: தினமலர்

3 comments:

வாசகன் said...

'பொன்விழா கொண்டாடுற ஆசையெல்லாம் இல்லையாங்க?'

Boston Bala said...

---கடந்த 41 ஆண்டுகளாக---

நிறைய உள்குத்து இருக்கே :P

---நான் உறுப்பினராக இருந்து வருகிறேன். ---

இப்பொழுதே பதவி விலகினால், இளைய சமுதாயத்துக்கு வழிவிட்ட மாதிரி இருக்குமே!

Anonymous said...

நன்னா கேட்டேள் போங்கோ நல்ல பதிவு

-o❢o-

b r e a k i n g   n e w s...