.

Sunday, August 19, 2007

புதுக்கோட்டை தொகுதிக்காக நாளை அ தி மு க உண்ணாவிரதம்.

தொகுதி மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி விலக்கப்பட்டதை அரசியற் கட்சிகள் தம் கையில் எடுத்துக்கொண்டுள்ளன.
தி.மு.க-வின் மத்திய அமைச்சர் இரகுபதி நேற்று இதுபற்றிப் பேசியிருந்தார்.

இன்று
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பின் மூலம் வரையறை செய்ததில், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை ரத்து செய்து விட்டு இத்தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளையும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நாடாளு மன்றத் தொகுதிகளில் இணைந்து இருப்பதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை சமஸ் தானமாக இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத் திற்கென்று தனி சிறப்பும் உண்டு. புதுக்கோட்டை வருவாய் மாவட்டம், மாவட்ட அளவில் ஒன்றாகவும், நாடாளுமன்றத்தொகுதி அளவில் வெவ்வேறாகவும் பிரிக்கப்பட்டு உள்ளதால், இம்மாவட்டத்திற்குச் சென்று சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தனையும் பிளவு பட்டு புறக்கணிக்கப்படும். இந்த மாற்றம் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆகவே, நாடாளுமன்ற மறு சீரமைப்பு எல்லை வரையறையில் மாற்றம் செய்து புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி, அ.தி.மு.க. புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகின்ற 20.8.2007 (திங்கட்கிழமை) அன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரத போராட்டம், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம்,எம்.எல்.ஏ., தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட கழகச் செயலாளர் க.வைரமுத்து முன்னிலையிலும் நடை பெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், புதுக் கோட்டை மாவட்டக் கழக நிர்வாகிகளும், பொறுப் பாளர்களும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி மற்றும் இலக்கிய அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை என்பதால், மாவட்ட மக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...