.

Sunday, August 19, 2007

வக்பு வாரிய கட்டிடம்: மேலும் ஒரு அறிக்கை.

வக்பு வாரிய முன்னாள் தலைவரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வக்பு வாரிய கட்டிட திறப்புவிழா தொடர்பாக தமிழக வக்பு வாரிய தலைவர் கூறி இருப்பது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் 79 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜரத் முகமது இனாயத்துல்லா என்ற மகான் அடக்கமாகி உள்ள கட்டிடத்தை இடித்ததை கண்டித்துத்தான் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதை வக்பு வாரிய தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருவது எனது கடமை என்று கருதுகிறேன்.

வக்பு வாரிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் காலதாமதம் ஆனது என்று அவர் கூறி இருப்பது முற்றிலும் தவறானது. வக்பு வாரிய கட்டிடம், அ.தி.மு.க. ஆட்சியில் பணம் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியும் முடிக்கப்பட்டது. கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாரானது இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், திறக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் சில பகுதியை வேண்டும் என்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இடித்துவிட்டு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். வாரியத் தலைவரும் கட்டிடம் திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளார் என்பதுதான் உண்மை.

இவ்வாறு பதர் சயீத் அறிக்கையில் கூறி உள்ளார்.

தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...