.

Sunday, August 19, 2007

பெரு: பூகம்ப பூமியில் கலவரம்.

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 510க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். 2000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இதனை தேசியப் பேரழிவாக அறிவித்துள்ளது.

பூகம்பத்தில் வீடுகள் மற்றும் உறவினர்களை இழந் தவர்களுக்கு நிவாரண பொருள்களும் போய்ச் சேரவில்லை.

இந்நிலையில் சமூக விரோதிகள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு சென்று வீடுகளில், கடை களிலும் புகுந்து சூறையாடிவருகிறார்கள். கொலை கொள்ளையிலும் ஈடுபடுகிறார்கள்.

மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினருக்கும், கலவரத்தில் ஈடுபடுகிறவர்களுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர்.

பூகம்பத்தில் பலியானவர்கள் உடல்களை குவியல் குவியலாக போட்டு மொத்தமாக அடக்கம் செய்து வருகிறார்கள். பல நாடுகளும் தங்கள் உதவிகளை அனுப்பி வருகின்றன

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...