.

Sunday, August 19, 2007

இலவச தொ.கா - விண்ணப்பம் விலைக்கு!

வாசுதேவநல்லூர் அருகேயுள்ளது தென்மலை முதல் நிலை ஊராட்சி.தென்மலை அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தில் இலவச வண்ண தொ.கா கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி அப்பகுதியில் கேபிள் டி.வி நடத்தும் ஒரு நபரும், உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் மற்றொரு நபரும் இணைந்து இலவச தொ.கா விண்ணப்ப படிவத்தினை தலா ரூ. 52-க்கு விற்பனை செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து பொது மக்கள் ரசீது கேட்டதற்கு அவர்கள் கேபிள் டி.வி கட்டணத்திற்குக் கொடுக்கப்படும் ரசீதினை கொடுத்துள்ளனர். மேலும், இந்தப் பணம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக போட்டோ எடுப்பதற்காக என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு 500 பேரிடம் பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...