.

Sunday, August 19, 2007

நீதிமன்றத்தில் சரணடைந்த மத்திய இணை அமைச்சர்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பாத்மி, தர்பங்கா நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் ஜாமீன் பெற்றார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பாத்மி. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பீகார், தர்பங்கா தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இவர் மீது தர்பங்கா முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளின்போது அவர் நீதிமன்றத்தில் நேரில் வரவில்லை. இதையடுத்து, பாத்மியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பாத்மி நீதிமன்றம் வந்து நேற்று சரண் அடைந்தார். பின்னர் அவருக்கு பிணை அளிக்கப்பட்டது.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...