.

Sunday, August 19, 2007

கேபிள் டி.வி இணைப்புகள்: தமிழக அரசு அறிக்கை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று ஒரு சில தொலைக்காட்சி செய்திகளில் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கு வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை உள்ளதாகவும், இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு பின்வரும் தெளிவுரையை வழங்குகிறது.

கடந்த 11.8.2007 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தொலைக்காட்சி நடத்துபவர்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே அரசு செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையிலேயே 13.8.2007 அன்று அரசாணை வெளி யிடப்பட்டது.

மத்திய அரசு சட்டத்தின்படி, சென்னை போன்ற பெருநகரங்களில் தொலைக்காட்சி நடத்துபவர்களிட மிருந்து சிக்னல்களைப் பெற்று அந்தந்தப்பகுதிகளிலுள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்கு எம்.எஸ்.ஓ. எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே பணியைப் பிற பகுதிகளில் செய்வதற்கு கேபிள் ஆபரேட்டர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், அமைச் சரவை முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அரசு, தொலைக் காட்சி நடத்துபவர்களிட மிருந்து எம்.எஸ்.ஓ. அமைப்பின் மூலம் சிக்னல்களைப் பெற்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளிக்கும் பணியினை சென்னை அல்லாத பிற இடங்களில் செய்யும் பொழுது அந்தப் பணியையும் "கேபிள் ஆபரேட்டர்கள்'' என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது.

ஏற்கனவே, 17.8.2007 அன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "யாரும் புகுந்து குழப்பம் ஏற்படுத்திட வழியின்றி, அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்துகிற நிறுவனமும் அல்ல, தனியார் வீடுகளுக்கும், இடங்களுக்கும் நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனமும் அல்ல'' என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

எனவே மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் கேபிள் டி.வி.க்கான அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளை முன்னமேயே ஏற்படுத்தி அவற்றின் மூலமாக வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கி தொழில் செய்து வருவோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படை யிலேயே, தொலைக்காட்சி களிலிருந்து சிக்னல்களைப் பெற்று அவர்களுக்கு அளிக்கும் பணியை மட்டும் அரசு மேற்கொள்ள முடிவு செய் துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

மாலைமலரிலிருந்து நேரடிப்பதிவு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...