.

Sunday, August 19, 2007

கேரளாவில் யானைகளுக்கு 'உரிமம்' முறை.

ஊருக்குள் உலா வரும் யானைகள் விவரங்களை பதிவு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முகாம் நேற்று திருவனந்தபுரம் பேரூர்கடையில் தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் 14 யானைகள் கலந்து கொண்டன.

யானையின் உயரம், வயது, பெயர், அதன் குணங்கள், யானை சொந்தக்காரரின் பெயர், ஊர் போன்ற குறிப்புகளை அதிகாரிகள் எடுத்து அதை பதிவு செய்து கொண்டனர். மேலும் அதே விவரங்களை மைக்ரோசிப்பில் பதிவு செய்து யானைகளின் காதுக்கு பின்னால் பொருத்தினர்.

ஊருக்குள் உலவும் யானைகள் எத்தனை என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவரும். மேலும் யானைகளுக்கு மதம் பிடித்தால் அந்த யானை யாருக்கு சொந்தமானவை, மதத்தை அடக்கும் முறை போன்ற விவரங்களை நுணுப்பி மைக்ரோசிப்பை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இந்த முறை யானைகளுக்கு உரிமம் வழங்குவதுபோன்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். .

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...