.

Sunday, August 19, 2007

விரைவில் வருகிறது: 'பட்டதாரி வரி'.

நீங்கள் அரசு உதவித்தொகையில் படித்துவிட்டு, இப்போது வெளிநாட்டில் பொருளீட்டி வருகிறீர்களா? அப்படியானால், உங்களுக்காகத்தான் இந்தச் செய்தி:

அரசின் நிதி உதவியை பெற்றுக் கொண்டு உயர் கல்வி பெற்றவர்கள் வெளி நாடுகளில் வேலை பார்ப்பது பற்றி மனிதவள ஆற்றல் துறையின் பாராளுமன்ற குழு ஒரு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில், "அரசின் நிதி மூலம் உயர்கல்வி பெற்று வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் `பட்டதாரி வரி' வசூலிக்க வேண்டும். படிப்புக்கு ஆன செலவை இதன் மூலம் சரிகட்ட வேண்டும். அவர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களிடம் இருந்தும் தனியாக வரி வசூலிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாடுகள் இந்த முறையை கடை பிடித்து வருகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...