.

Sunday, August 19, 2007

அணுசக்தி ஒப்பந்தம்: ஆட்சியைத் தகர்க்குமா?

அணுசக்தி ஒப்பந்த விவகாரம் நடுவண் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் இன்று அவசரமாக கூடி ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் நாளை மீண்டும் கூடி ஆலோசிக்க வருகிறார்கள்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி கட்சிகள் தங்கள் நிலையை விளக்கிய பிறகு, புதுதில்லியில் காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டமும் அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடனும் காங்கிரஸ் ஆலோசனையும் நடந்தேறிவருகின்றன.

காங்கிரஸ் உயர் மட்டக் குழு கூட்டத்தில், கட்சி தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து பேசினார். இடதுசாரி கட்சிகள் கூறுவது போல ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேனன் அப்போது விளக்கி கூறினார். இந்த கூட்டம் 90 நிமிடம் வரை நடந்தது.இதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவை, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சற்றுமுன்னுக்காக.....வாசகன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...