.

Tuesday, August 7, 2007

மருதமலை கோயிலில் ராஜகோபுர பணி - தலவிருட்சம் நடப்பட்டது



தொண்டாமுத்தூர், ஆக.7-

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தலவிருட்சம் இல்லாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலவிருட்சம் நடப்பட்டது.

மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. பல்வேறு காரணங்களால் இந்தப் பணி பாதியோடு நிற்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பணி நடக்கவில்லை.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேதனையடைந்தனர். ராஜகோபுரம் கட்டும் பணிக்குத் தேவையான அரசு மற்றும் தனியார் நிதி ஊக்குவிப்பு இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.

ராஜகோபுரம் கட்டும் பணி தொடர்ந்து தடை பட்டு வருவதற்குக் கார ணம் என்னவென்று பக்தர்கள், அறங்காவலர் குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலுக்கென பிரத்யேக தல விருட்ச மரமான மருதமரம் இல்லாதது தெரியவந்தது. கோயில் வளாகத்தில் இந்த மரம் இல்லாதததே கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி தொய்வுக்குக் கார ணம் என்று கருதினர்.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் அறங்காவலர் குழு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நடந்தது. அதில் ஆடிக்கிருத்திகையன்று கோயில் வளாகத்தில் தல விருட்ச மரம் நட்டு, அக்குறையைப் போக்குவது, தனியார் நன்கொடை பெற்று கோயில் கோபுரம் கட்டும் பணியை ஆகஸ்ட் இறுதிக்குள் துவங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.
ஆடிக்கிருத்திகை நாளான நேற்று கோயில் வளாகத்தில் தலவிருட்சமான மருத மரக்கன்றை நட்டனர். சென்னை வட பழனி கோயில் அறங்காவலரும், பாடகருமான சீர் காழி சிதம்பரம் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் நல்லா பழனிச்சாமி, உறுப்பினர்கள் சுகன்யா ராஜரத்தினம், ரவிச்சந்திரன், கோயில் துணை ஆணையர் அன்பு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

மங்கை said...

ஆஹா..சிவா..உங்க ஊரு செய்தி... சந்தோஷமா போட்டீங்களா....நன்றி

சிவபாலன் said...

மங்கை

வாங்க.. வாங்க..!!

எங்கடா, நம்ம ஆளுக ஒருத்தரையும் காணோமே என்று பார்த்தேன்..

எப்பவாவது ஒரு செய்தி வருது.. விடுவமா? Ha Ha Ha..

அதான்..!

நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...