.

Wednesday, April 4, 2007

ச: இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்ய பாக்.விருப்பம்

சிமென்ட் இறக்குமதி மீதான வரி ரத்து அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ்,பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது,வர்த்தகம்,எரிசக்தி மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த்திக் கொள்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.

இப்பேச்சுவார்த்தையின்போது சிமென்ட் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு ரத்து செய்ததை பயன்படுத்தி,இந்தியாவுக்கு சிமென்ட் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தயாராக இருப்பதாக மன்மோகனிடம் அசிஸ் கூறியதாக,பிரதமரின் ஊடகவியல் ஆலோசகர் சஞ்சயா பாரு தெரிவித்தார்.

"Yahoo - Tamil"

1 comment:

Anonymous said...

சிமென்ட் விலை குறைந்தால் சரி

-o❢o-

b r e a k i n g   n e w s...