.

Tuesday, May 8, 2007

ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் தகவல்

சென்னையில் கவிஞர் பா.விஜய்யின் 10 கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது: "கடந்த ஆட்சியில் அரசு வேலையில் ஆள் சேர்க்கத் தடைச் சட்டம் கொண்டு வந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இந்த இமயம் வளரக் கூடாது என்பதற்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 11 மாதங்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 649 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இனி மேலும் தொடர்ந்து அரசு வேலைகள் வழங்கப்படும்."

இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், மு. மேத்தா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர்கள் விவேக், பாக்யராஜ், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 comment:

Anonymous said...

நல்ல செய்திதான்.. இன்னும் போகவேண்டிய தூரம் வெகு தொலைவு. அதை மறுக்கக் கூடாது

-o❢o-

b r e a k i n g   n e w s...