.

Tuesday, May 8, 2007

ச: முதல்வரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு அரசு பணம் செலவிடப்படவில்லை

சென்னை, மே 7-
முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழாவுக்கு அரசு சார்பில் பணம் செலவிடப்படவில்லை. அதனால் மக்களை குழப்ப வேண்டாம் என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதியின் இந்த விழாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான செலவும் செய்யப்படவில்லை. பொதுக்கூட்ட விழா அனைத்தும் தி.மு.கவாலும், அதன் தோழமைக் கட்சிகளாலும்தான் செய்யப்படுகின்றது. சட்டமன்றத்தில் நடத்தப்படும் விழாவுக்கும் அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான செலவும், செய்யப்படாமல் நாங்களே பார்த்துக் கொள்வோம். எனவே அரசு பணம் செலவிடுவதாக நினைத்துக் கொண்டு யாரும் வருத்தப்பட வேண்டாமென்றும், மக்களை குழப்ப வேண்டாமென்றும், விழாக் குழுவின் பொருளாளர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

- மாலை முரசு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...