.

Wednesday, July 11, 2007

கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: என்.வரதராஜன்

தமிழகத்தில் முறைகேடாக நடத்தப்பட்டுள்ள கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தினார்.

மேலும் கூட்டுறவுத் தேர்தலில் திமுகவுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து அக்கட்சி சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தல் 90 சதவீத இடங்களில் முறைகேடாக நடந்துள்ளது. ஆளும் கட்சியினருடன் அதிகாரிகள் இணைந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் தமிழக அரசுதான் இத் தேர்தலை நடத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அளித்த பேட்டி சரியல்ல. என்னோடு தொடர்புகொள்ள முடியவில்லை என அவர் கூறியிருப்பது தவறு செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் செயலாகும்.

கூட்டுறவுத் தேர்தலை ஜனநாயக ரீதியாக நடத்துங்கள் எனக் கூறியபோது முதல்வர் தலையசைத்தார். ஆனால் படிப்படியாக வளர்ந்து ஜனநாயக விரோதத்துக்குள் திமுக சிக்கிக்கொண்டுள்ளதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மத்திய அரசின் ஆன்லைன் வர்த்தகத்தில் திமுக தலையீடு, மின்சார உற்பத்தியில் தனியார் கூடாது என்பது, மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, சென்னை விமான நிலைய விஸ்தரிப்பை தனியாரிடம் தரக் கூடாது ஆகியவற்றில் திமுக செயல்பாட்டை வரவேற்றோம். ஆனால் இந்த ஆதரவு ஜனநாயகத்தை அழிப்பதற்கான அனுமதியாக திமுக கருதக் கூடாது என்றார் வரதராஜன்.

தினமணி

CPM alleges DMK 'high-handedness' in Coop Elections

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...