.

Wednesday, July 11, 2007

ஓடும் இரயிலில் மானபங்க முயற்சி: RPF DIGக்கு வலைவீச்சு

ஜூலை 8 அன்று சம்பூர்ண கிராந்தி விரைவுவண்டியில் குளிரூட்டப்பட்ட முதல்வகுப்பில் பயணித்த வந்தனா எனற பீஹார் மாநில இ.ஆ.ப அதிகாரியையும் அவரது சகோதரியும்கௌதம் சீமா என்ற இ.ஆ.ப அதிகாரியின் மனைவியுமான சுஜாதா என்பவரிடமும் குடிபோதையில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக பி ஜே இராவல் என்ற இரயில்வே பாதுகாப்புப் படையின் டிஐஜி மீது முதல் குற்ற பத்திரிகை பதியப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை கண்கணிப்பாளர் அஜிதாப் குமார் கூறினார். இரு உறுப்பினர்களைக் கொண்ட துறைசார்ந்த விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டு தனது அறிக்கையை ஒருவாரத்திற்குள் சமர்ப்பிக்கும். முன்னர் இரயில்வே அமைச்சர் லாலு 'தன்னிடம் இர.பா.படை தலமைக்காவலர் இதுபோல நடக்கவில்லை ' என்று கூறியதை யடுத்து எழுந்த சர்ச்சையின் பின்னணியில் இந்த விசாரனைக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...