.

Wednesday, July 25, 2007

மோனிகா பேடி சிறையிலிருந்து விடுதலை

முன்னாள் இந்திப்பட நடிகையும் 'தாதா' அபு சலெமின் தோழியுமான மோனிகா பேடி இன்று ஹைதராபாத்தின் செஞ்சாலகுடா சிறையிலிருந்து விடுதலையானார். நேற்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. திங்களன்று உச்சநீதிமன்றம் ஜாமீனுக்கான விதிகளை தளர்த்தியது.

தன்னை விடுவித்த நீதிமன்றங்களுக்கு நன்றி தெரிவித்த மோனிகா இனி படங்களில் தொடர்ந்து நடிக்கவிருப்பதாகவும் அதற்காக திரும்ப ஹைதராபாத் வரவேண்டியிருக்கும் என்றும் கூறினார். தற்போது ஹோஷியார்பூரில் உள்ள தனது கிராமத்திற்கு செல்கிறார்.


NDTV.com: Monica Bedi released from jail

-o❢o-

b r e a k i n g   n e w s...