அனைத்து இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறு விலக்கிக் கொள்ளவில்லையெனின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக தில்லி உயர்நீதிமன்றம் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காண அரசிற்கு கெடு விதித்தது. மருத்துவ பட்டச் சான்றிதழ்கள் வழங்கப் படாவிடில் நீதிமன்றம் தலையிடவேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தது. இதனை அடுத்து உலக உடல்நல நிறுவன சந்திப்பொன்றிற்கு பூடான் செல்லவிருந்து உடல்நல அமைச்சர் அன்புமணி தன் பயணத்தை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. சான்றிதழ்களில் கையொப்பமிட்டிருந்த தாளாலர் மரு.சந்தீப் அகர்வால் நியமனம் செல்லாது என்று அமைச்சர் முன்னதாக கையெழுத்திட மறுத்து வந்தார்.
AIIMS doctors end strike
Thursday, August 30, 2007
மருத்துவர்கள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது
Posted by
மணியன்
at
3:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment