.

Thursday, August 30, 2007

சென்னை: பிரிக்கப்படும் பேருந்து நிலையம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூரில் வெளியூர் பேருந்துகளுக்கான நிலையத்தை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில்குமார் மாநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் யோசனை தெரிவித்திருந்தார்.

இதுபற்றி மாநகர வளர்ச்சிக் குழுமத்தலைவரும் அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் கேட்டபோது,

கோயம்பேடு பஸ் நிலையத்தை பிரித்து சென்னை நகரின் எல்லையில் பேருந்து நிலையங்களை உருவாக்கினால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்பது உண்மைதான்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கண்டிப்பாக மாற்று ஏற்பாடு செய்துதான் ஆக வேண்டும்.எனவே இதுகுறித்து கலந்தாய்வு கூட்டத்தில் எல்லோரும் சொன்ன யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

என்று பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...