.

Thursday, August 30, 2007

கருணா குழு முக்கியஸ்தர் சுட்டுக் கொலை

கருணா குழுவின் பிராந்திய அரசியல் பிரிவின் தலைவரான முரளி என அழைக்கப்படும் நடராஜா குமரன் , வயது 24, இன்று புதன்கிழமை விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் [ pistol] குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டி விட்டோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்து வரும் வேளையில் இச் சம்பவம் நடந்துள்ளது.


கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 2003 ல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறார்.



ஆதாரம் : BBC சிங்கள சேவை.

இச் சம்பவம் பற்றிய பிந்திய செய்தி



கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான Daily Mirror [வியாழக்கிழமை ஏடு] நடராஜா குமரன் விடுதலைப் புலிகளால் கொல்லப்படவில்லை எனச் செய்தி வெளியிட்டுள்ளது. கருணா குழுவில் இருந்து பிரிந்த குழுவான பிள்ளையன் குழுவைச் சேர்ந்தவரே இந்த நடராஜா குமரன் என்றும், இவர் கருணா குழுவினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச் சம்பவம் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...