.

Thursday, August 30, 2007

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிபிசி

The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians)
Udayavani - National Fishworkers Forum appeals to PM

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...