.

Saturday, June 30, 2007

நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு.

அமெரிக்க போர் கப்பல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா வின் அணு சக்தி போர் கப்பல் "யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்'நாளை காலை சென்னை துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் துõரத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த கப்பல் வருவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து தெளிவான தகவல் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.இந்திய கடலோர எல்லையில் தீங்கு விளைவிக்கும் பொருள்களை இக்கப்பல் குவிக்கக் கூடும். எனவே, இந்திய கடலோர எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நிமிட்ஸ் அணுசக்தி போர் கப்பலினால் தீங்கு ஏற்படுமா என அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

1 comment:

Anonymous said...

very noice.......

-o❢o-

b r e a k i n g   n e w s...