.

Sunday, July 8, 2007

எட்டு வயதில் தந்தையை பிரிந்து 23 வருடத்துக்குப்பின் கண்டுபிடித்த பெண்.

எட்டு வயதில் தந்தையைப் பிரிந்த பெண் 23 வருடங்களுக்குப்பிறகு தந்தையை துப்பறியும் நிறுவனம் உதவியுடன் கண்டு பிடித்து மகிழ்ந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த ஊரிகை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நஜிமா (வயது32) இவர் சவுதிஅரேபியாவில் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து வசதியான வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இவரது இளமை காலத்தில் தந்தை சகோதரிகளுடன் கஷ் டப்பட்டு வாழ்க்கை நடத்தினார். சென்னையில் பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து பிழைத்தார். கடைசியாக ஒரு பிராமணர் வீட்டில் வேலைக்கு சேர்ந்த நஜிமா அவர்கள் மூலம் சவுதிஅரேபியாவைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்தார். 2குழந்தைகள் உள்ளனர். சவுதியிலேயே வசித்து வருகிறார்.

தற்போது நஜிமாவுக்கு 32வயதுஆகிறது. இவருக்கு நீண்ட நாட்களாக தந்தையையும், சகோதரிகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை. இதற்காக பிரார்த்தனை நடத்தினார். அது வீண்போகவில்லை. தந்தையை கண்டுபிடித்து விட்டார்.

சென்னையைச் சேர்ந்த சன் டிடெக்டிவ் நிறுவனம் பற்றி கேள்விப்பட்டு போன் மூலம் தந்தையை பற்றிய விவரங்களை தெரிவித்து தேடும் பணியில் ஈடுபட்டார். தந்தையின் பெயர் இப்ராகிம்செரீப், வாய் பேச முடியாத ஊமை என்று மட்டும் தெரியும். 2சகோதரிகள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஊர் பெயர் காஞ்சீபுரம் அருகே உள்ள அண்ணாநகர் என்றும் கூறினார்.

இந்த தகவல்களை வைத்து துப்பறியும் நிறுவனம் நஜிமாவின் தந்தையை தேடும் பணியில் இறங்கியது. ஒரே வாரத்தில் அவரை தேடிகண்டு பிடித்து விட்டனர்.

தந்தை இப்ராகிம் செரீப் ஆற்காட்டில் உள்ள ஒரு ஓட் டலில் வேலை பார்த்து வந் தார். அங்கு துப்பறியும்நிறுவ னத்தினர் சென்று மகள் நஜிமா சவுதியில் இருப் பதாக தெரிவித்தனர்.இதை கேட்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இப்ராகிம் செரீப் முதலில் பீடிசுற்றும் தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி ரொக்காயா பீ இறந்து விட்டதால் 3 மகள்களுடன் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத் தினார்.

3 மகள்களும் வெவ்வேறு இடத்தில் வீட்டு வேலை செய்தனர். நஜிமாவுக்கு 8வயதான போது தந்தை சகோதரிகளை சந்திக்க முடி யாதபடி பிரிந்து விட்டார்.

முதலில் போலீஸ்காரர் ஒருவர் வீட்டிலும், தொடர்ந்து விமானப்படை அதிகாரி, முஸ்லிம் பிரமுகர் வீடுகளில் வேலை பார்த்தார். கடைசியாக சென்னையைச் சேர்ந்த பிரா மணர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்த நஜிமா அவர் மூலம் தொழில் அதிபரை மணந்து உயர்ந்து நிலையை அடைந்தார்.

மேலும் படிக்க...

1 comment:

Anonymous said...

Excellent story. I am happy for all of them. GOD bless them.

Ravi

-o❢o-

b r e a k i n g   n e w s...