.

Sunday, July 8, 2007

விசா மோசடி: விமான நிலைய ஊழியர் கைது.

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது43). இவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதனால் அவருக்கு விமான நிலைய அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதைப்பயன்படுத்தி திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் வெளிநாடு செல்ல விசா வாங்கி தருவதாக கூறி உள்ளார். அவர் விமான நிலைய ஊழியராக இருந்ததால் அவரை நம்பி 100க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்து உள்ளனர். ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.1 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விசா வாங்கியவர்கள் விமான நிலையம் சென்றதும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் அவை போலி விசா என்பது தெரியவந்தது அவர்கள் இது குறித்து விஜயகுமாரிடம் கேட்டால் கஸ்டம்ஸ் அதிகாரியாக தற்போது உள்ளதாகவும் மீண்டும் விரைவில் விசா ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரிடம் விசா வாங்கி ஏமாந்த ஒருவர் இதுகுறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்பு போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...