.

Sunday, July 8, 2007

வீதியில் யானை: பீதீயில் மக்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை திடீரென வீதிகளில் ஓடியதால் மக்கள் பீதியடைந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெண் யானை கட்டப்படும் இடத்தை சுத்தம் செய்வதற்காக யானையை பாகன் அழைத்து சென்றார். அப்போது யானை திடீரென பாகன் பிடியிலிருந்து விடுபட்டு ஓட ஆரம்பித்தது.

இதையடுத்து யானையின் காலில் உள்ள இரும்புச் சங்கிலியைப் பிடித்து பாகன் இழுத்தார். ஆனால் அதற்கும் கட்டுப்படாமல் ஓடியது அந்த யானை.

திடீரென சாலையில் யானை ஓடி வருவதைப் பார்த்த பக்தர்களும், மக்களும் அலறி அடித்து அங்குமிங்கும் ஓடினர். வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர்ந்து பாகனும் விரைந்து வந்தார்.

ஓடிய யானை ஒரு மரத்திற்குக் கீழே போய் நின்று கொண்டது. அந்த யானையை பாகன் சமாதானப்படுத்தி, அழைத்துச் சென்றார். அதன் பிறகுதான் யானை பீதி விலகியது.

தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...