இன்று கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் 94வது பிறந்தநாள். வழமையாக பொதுவுடமை தோழர்கள் தங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது இல்லை எனினும் தனது சீடரும் மாநில போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான சுபாஷ் சக்ரவர்த்தியின் வேண்டுகோளை தட்டமுடியாது இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் கூறினார். " இந்த இனிய நேரத்தில் எதிர்கட்சிக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் மேற்கு வங்கம் தொழில்மயமாவதை ஆதரிக்க வேண்டும், நாங்கள் மக்களுக்கு உணமையில் நல்லதையே செய்கிறோம்" என்று கூறினார். விவசாயத்தில் முன்னணி வகிக்கிறோம்; பஞ்சாயத்து ஆட்சியில் முதன்மையாக இருக்கிறோம். இனி நான்காவதாக இருக்கும் தொழிற்துறையிலும் முன்னணிநிலையை அடைய வேண்டும். சிறுதொழில்களும் நடுத்தர தொழில்களும் வளர விரும்புகிறோம். அதற்கு எதிர்கட்சிகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வாழ்க்கைக் குறிப்பும் மேல் விவரங்களுக்கும்...India eNews -
Monday, July 9, 2007
ஜோதிபாசு 94ஆம் பிறந்தநாள்
Labels:
அரசியல்,
இந்தியா,
வகைப்படுத்தாதவை
Posted by
மணியன்
at
6:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment