.

Monday, July 9, 2007

சீனா: மக்கள்தொகை கட்டுப்பாடு மேலும் கடுமையாகிறது

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றுள் அரசு அதிகாரிகள் ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்பதும் ஒன்று. ஒரு குழந்தைக்கு மேல் இன்னொரு குழந்தை பெறும் அரசு அதிகாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆனால் ஹுனான் மாகாணத்தில் மட்டும் 2000 அரசு அதிகாரிகள் இந்தக் கட்டுப்பாட்டை மீறி ஒன்றுக்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அபராதத் தொகையை செலுத்தி விட்டனர். மிக எளிதாக அபராதத் தொகையை கட்டி விடுவதால் அபராதத் தொகையை மேலும் அதிகரிக்கவும் பதவி உயர்வை ரத்து செய்வது குறித்தும் சீன அரசு ஆலோசித்து வருகிறது.

எம்.பி.க்களுக்கும் இதே கட்டுப்பாடு இருந்தும் சில எம்.பி.க்கள் 4 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு 4 குழந்தை பெற்றுள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...