உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் ஆர்.பி. பாண்டேவுக்கு சிபிஐ எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 1977ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்த முலாயம் சிங் தமது சொத்து மதிப்பாக அளித்த உறுதிமொழியை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சிபிஐ அனுப்பியுள்ள இந்தக் கடிதம் தலைமைச் செயலகத்திற்கு கடந்த சனிக்கிழமை கிடைத்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
லக்னோ மற்றும் முலாயம் சிங்கின் சொந்த கிராமமான மெயின்புரியில் 2 வங்கிக் கணக்குகள் 2.53 ஏக்கர் நிலம், ஒரு வீடு ஆகியவை தமக்கு சொந்தமானவை என்று முலாயம் சிங் 1977ம் ஆண்டு தேர்தலின் போது குறிப்பிட்டிருந்தார். 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜீப், ஒரு ஸ்கூட்டர், 3 எல்ஐசி பாலிசி போன்றவையும் இருப்பதாக அவர் அந்த உறுதிமொழியில் கூறியிருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் முடிவடைந்த சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங் தமக்கு சொந்தமாக 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலம் 14.63 ஏக்கர், 8 வங்கிக் கணக்குகளில் 35 லட்சம் ரூபாய் போன்றவற்றையும் தமது உறுதிமொழிப் பத்திரத்தில் முலாயம் சிங் குறிப்பிட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- MSN INDIA
The Hindu News Update Service :: CBI seeks information on Mulayam's assets
Monday, July 9, 2007
முலாயம் சிங் சொத்து மதிப்பு: சிபிஐ கோருகிறது
Labels:
அரசியல்,
இந்தியா,
ஊழல்,
சட்டம் - நீதி
Posted by
Boston Bala
at
9:01 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment