.

Monday, July 9, 2007

அடுத்த துணை குடியரசுத்தலைவர் யார்?

துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான போட்டியில் மகாத்மா காந்தியின் இரண்டு பேரன்கள் உள்ளதாக இச்செய்தி தெரிவிக்கிறது. தற்சமயம் ஆளுநராகப் பணிபுரியும் கோபால்காந்தி, முன்னாள் எம்.பி ராஜ்மோஹன் காந்தி ஆகியோரே அவர்கள்.

நந்திகிராம சம்பவங்கள் குறித்து கருத்தளித்த கோபால் காந்திக்கு இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகலாமாம்.

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முஷீருல் ஹசன், புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல், ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்டோரும் இடதுசாரி வட்டாரங்களில் ஆலோசனையில் உள்ளனராம். காங்கிரஸ்காரர்களாக இருக்கக்கூடாது என்பது இடதுசாரிகளின் நோக்கு.

தி மு க-வும் இப்பதவிக்கு குறி வைத்துள்ளது தெரிந்ததே.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...