.

Thursday, July 26, 2007

'சென்னை-28' பட விழாவையொட்டி 32 அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம், 'சென்னை-28.' இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, விழா கொண்டாடப்படுகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் விழா நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, 32 அணிகள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இரவு-பகல் ஆட்டமாக இந்த போட்டிகள் நடைபெறும். இதில், 384 வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிகள், ஆகஸ்டு 4-ந் தேதி மாலை முடிவடையும். வெற்றி பெறும் அணியுடன் 'சென்னை-28' படத்தில் நடித்த கிரிக்கெட் அணி மோதும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

விழாவில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் நிறுவனம், ஹலோ எப்.எம். நிறுவனம் ஆகியவை செய்து வருகின்றன.

இந்த தகவல்களை 'சென்னை-28' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், டைரக்டர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.

தினத்தந்தி

IndiaGlitz - Cricket carnival for Chennai 600028 - Tamil Movie News

1 comment:

சிவபாலன் said...

பாபா

வித்தியாசமான சினிமா செய்தி!

மக்களும் விளம்பரபடுத்த மிக அழகா சிந்திக்கிறார்கள்! ம்ம்ம்

-o❢o-

b r e a k i n g   n e w s...