.

Thursday, July 26, 2007

திருமணமாகாதவருக்கு சாராயம் கொடுத்து "கு.க" ஆபரேஷன்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 26-

திருமணம் ஆகாத எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துவிட்டார் என சுகாதார ஆய்வாளர் மீது நெசவுத் தொழிலாளி ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). நெசவுத் தொழிலாளி. இவர், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

நெசவுத் தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எனக்கு உடல் உபாதை ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள், எனக்கு ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெலமங்கலம் சுகாதார ஆய்வாளராக இருந்தவர், எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்தார். போதையில் இருந்த எனக்கு அப்போது அவர் சிகிச்சை அளித்தார். அவர்தான் ஏமாற்றி எனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வைத்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு புகாரில் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெங்கடேசுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்ட ஜனநாயக இளைஞர் அணியினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். வாலிபரை ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துண்டு நோட்டீஸ்கள் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கெலமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி:

நன்றி: தமிழ் முரசு

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சஞ்யெய் காந்தி இப்போ இல்லைதானே!
இதனால் இந்த அதிகாரிக்கு சன்மானம் கிடைக்குமா?
எதற்கும் இந்த அன்பர்,கிட்னியும் இருக்கா? என பரிசோதிப்பது நன்று!
கொடுமையடா சாமி!!!

-o❢o-

b r e a k i n g   n e w s...