.

Thursday, July 26, 2007

'இறந்தவர்' உயிருடன் திரும்பினார்

வாராணசி அருகே ஒரு கிராமம்.

அது ஒரு சவ ஊர்வலம்.
இறந்தவர் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர். கல்லு (லல்லு அல்ல)யாதவ் என்பது அவர் பெயர்.

கடந்த செவ்வாய் இரவு அவருடைய நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் அடங்கிப்போயிருந்தது.

சில மணி நேரங்களுக்குப்பின்னர், உறவினர்களும், கிராமத்தினரும் துக்கத்துடன் அவரை எரியூட்ட சவகட்டிலில் சுமந்துச்செல்கின்றனர்.

மெதுவாக உணர்வு திரும்பிய அவர் கேட்கிறார்: "என்னை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள்?"
ஏதோ துக்க நினைப்பில் இருந்த உறவினர்கள் "இறந்துவிட்டீர்கள், எரியூட்ட எடுத்துச்செல்கின்றோம்" என்றுச்சொல்ல "என்ன, என்னை உயிருடன் எரியூட்டப்போகிறீர்களா?" என்று கத்துகிறார்.

துக்க உணர்விலிருந்து நிதானத்து வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

காட்டுத்தீயாகப் பரவிய இச்செய்தி 'சற்றுமுன்'னையும் வந்தடைந்தது.

பி/டி/ஐ

1 comment:

Anonymous said...

கடன் வாங்கியவன் கனவு தகர்ந்த்து.

புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...