.

Thursday, June 21, 2007

ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள்.

காட்டாமணக்கு போன்ற தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை கழக நிபுணர்கள் ஆரஞ்சுபழம், ஆப்பிள் பழம் போன்றவற்றில் இருந்து உயிரிஎரிபொருள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த பழங்களில் `பிரக்டோஸ்' என்ற சர்க்கரை சத்து உள்ளது. இந்த சர்க்கரை சத்தை எரிபொருளாக நிபுணர்கள் மாற்றி உள்ளனர். ஈத்தனாலை விட அதிக சக்தி கொண்ட எரிபொருளாக இது உள்ளது. இந்த எரிபொருளை கொண்டு கார்களையும் ஓட்டி சாதனை நடத்தி உள்ளனர். இதில் இருந்து அதிக அளவு கார்பன் புகை வெளிவருவது இல்லை.

ஏற்கனவே இங்கிலாந்து விஞ்ஞானிகள் கழிவுப்பொருள்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றில் இருந்து உயிரி எரிபொருளை தயாரித்துள்ளனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...