.

Thursday, June 21, 2007

தமிழ்நாடு: மழை இரண்டு நாட்கள் நீடிக்கும்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறு சிறு தூறல் மழையும் பெய்தது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய மழைபெய்து வருகிறது. கோடையில் பருவ மழை போல் மழை கொட்டுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையில் மீனம் பாக்கம், தாம்பரத்தில் தலா 3.6 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 5.6 மி.மீட்டரும் மழை பெய்தது.

மத்திய வங்கடலில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியா குமரி தூத்துக்குடி உள்பட கடலோர மாவட்டங்களில் அடைமழை பெய்து வருகிறது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...