.

Thursday, June 21, 2007

"கலாம் ஆடி முடித்துவிட்டார்": - பவார்

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத்தலைவராக்க முயலும் மூன்றாவது அணிக்கு மேலும் ஒரு அடியாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், கிரிக்கெட் போர்ட் தலைவருமான சரத்பவார் பேட்டியளித்துள்ளார்.

"அவர் களத்தில் இல்லை, எனவே மீண்டும் ஆட வருகிறேன் என்று சொல்லக்கூடாது" என்றார் அவர். "அவரை எனக்கு மிக நன்றாகத்தெரியும், நாங்கள் இணைந்துப் பணியாற்றியிருக்கிறோம்" என்றார் பவார். சரத்பவார் மத்தியில் இராணுவத்துறை அமைச்சராகப்பணியாற்றியபோது, கலாம் அவருக்கு அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

"நேர்மையான மனிதர்" என்று கலாமைப் புகழ்ந்த பவார், "தான் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு ஜெயிக்கும் வாய்ப்பிருந்தால் போட்டியிடுவதாக மிக உயர்ந்த பதவி வகிக்கும் அவர் சொல்வது பரிதாபத்திற்குரியது" என்றார்.

"ஜனநாயகத்தில், விரும்பும் தொகுதியில் நின்று வென்று பொதுவாழ்வுக்கு வரலாம், அதைவிடுத்து, வெல்லும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே போட்டியிடுவதாகச் சொல்லக்கூடாது" என்றார்.

பிடிஐ

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...